தீபாவளியை முன்னிட்டு சாலைகள் மூடல்; போக்குவரத்து அதிகரிக்கலாம்

தீபாவளி சந்தையை முன்னிட்டு நாளை மாலை 4 மணி முதல் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும். சிராங்கூன் ரோட்டிற்கு இடைப்பட்ட பர்மா ரோடு, பெர்ச் ரோடு, ஃபேரர் பார்க் ஸ்டேஷன் ரோடு ஆகியவை சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்படும். இந்த சாலைகளைப் பயன்படுத்த போலிஸ் வாகனங்களுக்கும் அவசர சேவை வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு வாகனமோட்டிகளுக்கு போலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

வார இறுதியில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நாளையும் வரும் திங்கட்கிழமையும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இரு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நிலைமையை அறிந்துகொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்குமாறும் பயணிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!