சிங்கப்பூரின் கொடியைத் தாங்கிய கப்பல் கடத்தல்

ஆப்பிரிக்காவின் கெமரூனுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் சிங்கப்பூரின் கொடியைத் தாங்கிய கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

'பெரன்ட்ஸ் சீ' என்ற அந்தக் கப்பலை கமரூனின் தனியார் படை ஒன்றைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் கைப்பற்றினர். 'ஏகே 47' ரக துப்பாக்கிகளை வைத்திருந்த அந்தத் துப்பாக்கிக்காரர்கள், கப்பலின் 26 பணியாளர்களைக் கடத்தி வைத்திருப்பதாக சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் 'ஈஸ்டர்ன் பசிபிக் ஷிப்பிங்' நிறுவனம் தெரிவித்தது.

வர்த்தக ரீதியான பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்தக் கடத்தல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களில் இந்தியா, உக்ரேன், சீனா, பிலிப்பீன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்றது 'ஈஸ்டர்ன் பசிபிக் ‌ஷிப்பிங்'. எந்த விதமான தூண்டுதலுமின்றி செய்யப்பட்ட இந்த வன்செயலைக் கண்டிப்பதாகவும் இதற்கு உரிய சட்ட நடவடிக்கையை கெமரூனிய அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலில் இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவரவில்லை என்றது அந்நிறுவனம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!