மின்னணுவியல் பொருட்கள் தொடர்பான மோசடிகளில் கடந்த ஆண்டு பத்தில் ஏழு சம்பவங்கள் கைத்தொலைபேசி விற்பனையுடன் தொடர்புடையவை என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
மின்னனுவியல் மோசடிகளின் தொடர்பில் குறைந்தது 700 புகார்களைப் பெற்றிருப்பதாக போலிஸ் தெரிவித்தது. இவற்றில் 68 விழுக்காடு, கைத்தொலைபேசி விற்பனை தொடர்பில் செய்யப்பட்டதாக போலிஸின் ஆலோசனைக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறுவதாக போலிஸ் தெரிவித்தது. சந்தையில் வெளியிடப்படும் அண்மை கைபேசி வடிவங்களின் பிரபலத்தை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக போலிஸ் கூறியது.
மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு போலிஸ் பொதுமக்களுக்கு இந்தக் குறிப்புகளை முன்மொழிகிறது:
-நம்ப முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் கைபேசிகள் விற்கப்படுவதாகக் குறிப்பிடும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
-விற்பனையாளர்களின் அடையாள அட்டையையோ வாகன உரிமத்தையோ வைத்து அவர்கள் உண்மையானவர்கள் என்று கருத வேண்டாம்.
- முடிந்தவரை முன்பணம் கட்டுவதைத் தவிர்க்கவும். முன்பணம் கட்டுவதற்கு முன்னர் விற்பனையாளர்களை நேரில் சந்திப்பது நல்லதாகும்.