ரத்த நன்கொடையாளர்கள் 800,000க்கும் மேற்பட்டோரின் தனிநபர் தகவல்கள் இணையத்தில் தவறுதலாகப் பதிவேற்றம் செய்யப் பட்டதாக நேற்று சுகாதார அறிவி யல் ஆணையம் (ஹெஜ்எஸ்ஏ) கூறியது.
ஆணையத்திற்குச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று இவ்வாறு இவ்வாண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று தவறுதலாகச் செய்ததாகவும் தவறு கண்டுபிடிக் கப்பட்ட உடனே தகவல்களைப் பார்ப்பதற்கான இணைப்பு துண் டிக்கப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைவழி தெரிய வந்துள் ளது.
இத்தனிநபர் தகவல்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பார்வை யிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இணையப் பாதுகாப்பு நிபுணர் செவ்வாய்க்கிழமை அன்று இணை யத்தளத்தில் இதைக் கண்டுபிடித்த தாகவும் மறுநாள் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் (பிடிபிசி) தெரியப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அதனையடுத்து தேசிய ரத்த வங்கிக்குப் பொறுப்பான 'எச் எஸ்ஏ'யிடம் 'பிடிபிசி' தகவல் தெரிவித்தது.
தகவல்களை நிர்வகிக்கும் சேவை நிறுவனமான 'செக்கியூர் சொலுஷன்ஸ் குரூப்'புடன் உடனே 'எச்எஸ்ஏ' தொடர்புகொண்டு தகவல்களுக்கான இணைப்பைத் துண்டிக்குமாறு சொன்னது.
இதுவரை நாட்டில் ரத்த தானம் செய்த அனைவரின் பதிவு விவரங் களையும் இத்தகவல்கள் கொண்டி ருந்தன.
ரத்த தானம் செய்ய முன்வந்தும் முடியாமல் போனவர்களின் தகவல் களும் தரவுத்தளத்தில் இடம்பெற்று இருந்தன.
800,000 ரத்தகொடையாளர்களின்தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம்
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 10:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!