ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை கைகலப்பு நடந்ததாக நம்பப்படுகிறது. அந்தப் பகுதியைச் சுற்றிலும் போலிசார் தடுப்பு போட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலுள்ள படிக்கட்டுகளின் அடியில் குளம் போல் ரத்தம் தேங்கி இருந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது.
உதவிக்கான அழைப்பு இன்று காலை சுமார் 6.30 மணிக்கு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படும் நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கூறுகிறது.