வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அல்லது கட்டாய விடுப்பில் இருப்போரை அந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளியேற்றும் செய்தி வெளியாகி இருப்பதாகவும். அச்செய்தி மிகவும் கவலைக்குரியது என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய செயல்கள் சரியில்லாதவை. வூஹான் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
“மற்றவர்களுக்கு அந்தக் கிருமி பரவக்கூடாது என்பதற்காகவே தனிமைப்படுத்தப்பட்டோர் அல்லது கட்டாய விடுப்பில் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். நிலைமை எப்படி மாறும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. மற்றவர்களும் தனிமைப்படுத்தப்படலாம் அல்லது கட்டாய விடுப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது நாடு தழுவிய முயற்சியாகும்,” என்று நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் அமைச்சர் ஈஸ்வரன்.