சிங்கப்பூரில் மேலும் இரண்டு கொரோனா கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மொத்தம் 45 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் எழுவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர பராமரிப்புப் பிரிவில் உள்ளனர்.
இந்நிலையில் மொத்தம் எழுவர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் செர்டிஸ் சிஸ்கோவில் பணிபுரியும் 37 வயது சிங்கப்பூர் ஆடவர். மற்றொருவர் சீனாவின் வூஹான் நகரிலிருந்து மீட்கப்பட்ட 2 வயது சிங்கப்பூர் பெண் குழந்தை.