2 வாரங்களுக்குப் பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு கொவிட்-19 நோயாளி

சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 3) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தொற்று காரணமாக யாரும் அவசர சிகிச்சைப் பிரிவில் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைத் தவிர மேலும் 114 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூகப் பராமரிப்பு நிலையங்களில் 5,730 பேர் குணமடைந்து வருகின்றனர். இதுவரை 47,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 226 பேரில் ஒருவர் இலங்கையிலிருந்து குறுகிய கால விசாவில் இங்கு வந்தவர். அவர் சாங்கி சிறை வளாகத்தில் ஜூலை 30 அன்று அனுமதிக்கப்பட்டார்.

சிறையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 26 வயதான அந்த ஆடவர், இதற்கு முன்பு சிறையில் அனுமதிக்கப்பட்டபோது ஜூலை 2, 22 தேதிகளில் அவருக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு கிருமித்தொற்று இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!