ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘கல்வி அமைச்சு-தேசிய சமூக சேவை மன்றத்தின் சிறப்பு தேவையுடைய மாணவர்களுக்குக் கற்பிக்கும் தலைசிறந்த ஆசிரியர்கள்’ (MOE-NCSS OUTSTANDING SPED TEACHER AWARD) என்னும் பெயரிலான விருது வழங்கப்பட்டது. மொத்தம் 115 பரிந்துரை களில் மூன்று ஆசிரியர்கள் இவ்விருதுகளைப் பெற்றனர்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இம்மாதம் 2ஆம் தேதி நடந்த மெய்நிகர் கொண்டாட்டம் ஒன்றில் கிரேஸ் ஆர்ச்சர்ட் பள்ளி ஆசிரியர் திருவாட்டி தமிழ்செல்வியும் அங்கீ கரிக்கப்பட்டார்.
தமிழ்ச்செல்வி அவரின் பள்ளி தலைமை ஆசிரியரால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். சிறப்புத் தேவையுடைய மாணவர்களை போட்டித்தன்மைமிக்க விளையாட்டு களில் ஈடுபடுத்தும் தனித்துவ முயற்சிகள் தமிழ்ச்செல்வியின் சிறப்பான செயல்பாடுகளில் ஒன்று.
“மாணவர்கள் இளம்வயது என்பதால் நண்பர்களுடன் வெகுளி யாக இருந்துவிடுகின்றனர். படிப்பு, விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவது சிரமம். சிறப்புத் தேவைகள் இருப்பதால் ஊக்கம் இல்லாமலும் போகலாம்.
“ஆனால் பல மாணவர்களுக்குத் திறமை உண்டு. சாதாரண மாணவர்களைவிட சிலரால் நன்றாக செயலாற்ற முடியும். அவர்
களின் திறன்களை வெளிக்கொணரவே தனிப்பட்ட அக்கறையில் முயற்சிகள் எடுத்து வருகிறேன்,” என்றார் செல்வி, 52.
கடந்த 15 ஆண்டுகளாக சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்குக் கற்பித்து வரும் செல்வி, தற்போது பள்ளியில் மாணவர் தலைமைத்துவ பாடத்திற்கு தலைமை ஆசிரியராகவும் கட்டுப்பாடு ஆலோசகராகவும் பொறுப்பு வகிக்கிறார். கணிதம், உடற்கல்வி ஆகிய பாடங் களையும் அவர் கற்பிக்கிறார்.
அத்துடன் சிங்கப்பூர் சிறப்பு ஒலிம்பிக் அமைப்பில் விளையாட்டாளர்களுக்கான தடகள வழிகாட்டி யாகவும் சிங்கப்பூர் உடற்குறை உள்ளோருக்கான விளையாட்டு மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப் பினராகவும் இருக்கிறார் செல்வி.
அவர் வழிகாட்டிய இரண்டு மாணவர்கள் அனைத்துலக போட்டி களில் பங்கேற்று, பதக்கங்கள் வென்றுள்ளது இங்கே குறிப்பிடத் தக்க அம்சம்.
“எல்லாரைப்போல சிறப்புத் தேவை உள்ளோரையும் சமமாக மக்கள் கருதவேண்டும். அவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரக மனிதர்கள் அல்ல. சமூகத்துடன் அவர்களையும் ஒன்றிணைத்து திறமை வாய்ந் தவர்களுக்குச் சம வாய்ப்பளிப்பது முக்கியம்,” என்றார் செல்வி.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு வழிகாட்ட மேலும் பலர் தொண்டூழியர்களாக முன்வரவேண்டும் என்பது அவரது விருப்பம்.
தமது பள்ளி, சக ஆசிரியர்கள், குடும்பம் ஆகியோருக்கு நன்றி
தெரிவித்த செல்வி, கற்பித்தல் துறை தமக்கு அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.
மெய்நிகர் கொண்டாட்டங்களில் கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களின் போட்டித்தன்மையையும் நிபுணத்துவத்தையும் அதி
கரிக்கும் புதிய நீண்டகாலத் திட்டங்கள் பற்றி அவர் அந்நிகழ்வில் விவரித்தார்.