கிளமென்டியில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயது மாது காயமடைந்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட நான்கு வாகனங்களில் ஒன்றான காரின் ஓட்டுநரான அவர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
கிளமென்டி ரோடு, உலு பண்டான் ரோடு ஆகியவற்றுக்கு இடையிலான சாலை சந்திப்பில் நிகழ்ந்த அந்த விபத்தில் 2 கார்கள், ஒரு டாக்சி, ஒரு லாரி என மொத்தம் 4 வாகனங்கள் மோதிக்கொண்டன.
சம்பவம் பற்றி இன்று காலை 9.11 மணிக்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது; சம்பவம் பற்றிய விசாரணை தொடர்கிறது.