மக்களிடம் நற்சிந்தனை வளர்த்த நம்பிக்கைப் பொங்கல்

கொவிட் சூழ­லி­லும் சிங்­கப்­பூ­ரில் நேற்று தமிழர்கள் பொங்­கல் வைத்து உழ­வர் திரு­நா­ளைக் கொண்­டா­டி­னர். சிரம காலம் நீங்கி வாழ்­வில் மகிழ்ச்சி பொங்க வேண்­டும் என வீடு­க­ளி­லும் கோயில்­க­ளி­லும் பொங்­கல் பொங்கி கட­வுளை வேண்­டி­னர்.

பொது­மக்­க­ளு­டன் பொங்­கல் வைத்த வழி­பாட்­டுத் தலங்­களில் ஒன்­றான புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணியர் ஆல­யத்­தில் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் மக்­கள் பொங்­கல் பொங்­கி­னர்.

மூன்­றா­ம் கட்டத் தளர்­வைத் தொடர்ந்து ஆல­யத்­தில் 150 பேர் வரை கூட­அ­னு­மதி இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­கள் ஆல­யத்­தில் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஆல­யத்­தின் செய­லா­ளர் எ. அண்­ணா­துரை தெரி­வித்­தார்.

எளி­மை­யான அத்­தி­யா­வ­சிய வழி­பா­டு­கள் மட்­டுமே நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போது கோயி­லுக்கு சுதந்­தி­ர­மாக செல்ல முடி­வ­தில் மகிழ்ச்சி அடைந்த 81 வயது துரை­சிங்­கம் சிங்­கப்­பூரை நோய்ப் பர­வ­லில் இருந்து பாது­காத்து வரும் அனை­வ­ருக்­கும் இதற்கு நன்­றி­கூற வேண்­டும் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் நிரந்­த­ர­வா­சம் பெற்­றுள்ள மலே­சி­யர் திரு விக்­னேஷ்­வன், மூன்­றாம் கட்­டத் தளர்வு நட­வ­டிக்­கை­யில் பொங்­கல் கொண்­டா­டு­வது ஓர­ளவு நிம்­ம­தியை­யைத் தந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

ஓராண்­டுக்கு மேல் பெற்­றோ­ரைப் பார்க்­கா­மல் இருப்­பது கவலை அளித்­தா­லும் சிங்­கப்­பூ­ரின் சிறந்த நிர்­வா­கம் ஆறு­த­லை­யும் நிம்­ம­தி­யும் தரு­கிறது என்­ற­னர் ஜோகூ­ரைச் சேர்ந்த திரு விக்­னேஷ்­வ­ரன், 40, அவ­ரது மனைவி திரு தீபா 38 இரு­வ­ரும்.

“கிரு­மிப்­ ப­ர­வ­லால் உல­க­ள­வில் மாண­வர்­களின் கல்வி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் சிங்­கப்­பூ­ரில் மாண­வர்­கள் நல்ல நிலை­மை­யில் இருப்­ப­தாக அண்மைய ‘ஓ’ நிலைத் தேர்­வு முடிவுகள் காட்­டு­கின்­றன,” என்றனர் அவர்­கள்.

பொங்­கலை வீட்­டில் கொண்­டா­டு­வ­து­டன் சமூ­கத்­தி­ன­ரு­டன் கொண்­டா­டு­வது உற்­சா­கம் தரு­வ­தாக பயிற்­று­விப்­பா­ளர் சுமித்ரி பழனி­நா­தன், 50, தெரி­வித்­தார்.

“இத்­த­கைய விழாக்­கா­லங்­க­ளின்­போது சமூ­கத்­தைப் பற்­றிய சிந்­த­னையை வளர்த்­துக்­கொள்­ள­லாம். வசதி குறைந்­தோ­ருக்கு எப்படி உதவி செய்­ய­லாம் என்­பது பற்­றி­யும் எண்ணிப் பார்க்கலாம்,” என்று அவர் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் தங்­க­ளது குடும்­பத்­தை­விட்டு இங்கு வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பணிப்­பெண்­க­ளுக்­கும் இந்­தப் பொங்­கல் நிம்­ம­தி­யைத் தர­வேண்­டும் என்று 37 வயது பணிப்­பெண் கலை­வாணி கூறி­னார்.

வியா­ழக்­கி­ழ­மை­தோ­றும் கோயி­லுக்­குச் செல்­வ­தா­கக் கூறும் மேற்பார்­வை­யா­ளர் இளங்­கோ­வன், 45, இவ்­வாண்டு தமது பிள்­ளை­க­ளின் படிப்­பி­லேயே தமது முழுக் கவ­ன­மும் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

கிரு­மிப்­ ப­ர­வ­லால் பலர் துன்­பத்­திற்கு உள்­ளாகி இருப்­ப­தால் விரை­வில் வழக்­க­நிலை திரும்புவதை விரும்­பு­வ­தாக இயந்­திர உற்­பத்தி பணி­யா­ளரான 23 வயது கீதா தெரி­வித்­தார்.

பல்­வேறு கார­ணங்­க­ளால் மன உளைச்சல் நிறைந்த உள்­ளங்­கள் இந்த நல்ல நாளில் நிம்­ம­தி­யைப் பெற­வேண்­டும் என்­பது சொந்­தத் தொழில் செய்­யும் 45 வயது அன்­பின் பொங்­கல் வேண்­டு­தல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!