சிங்கப்பூர் செலவுமிக்க ஆசிய கட்டுமானச் சந்தையில் நான்காவது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. திறன் படைத்த ஊரியர்களுக்கான பற்றாக்குறையும் கட்டுமானப் பொருட்களின் விலை கூடியதும் சிங்கப்பூரின் இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'டர்னர் அண்ட் டவுன்சென்ட் நிறுவனத்தின் அனைத்துலகக் கட்டுமானச் சந்தை ஆய்வு 2021' இவ்விவரங்களைக் குறிப்பிட்டது.
இதன் காரணமாக இவ்வாண்டின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் கட்டுமானத் துறை ஏலக்குத்தகை விலைகள் ஏற்ற இறக்கமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்
படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
ஏலக்குத்தகை விலைகள் 6 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரையில் இருக்கக்கூடும் என இதற்கு முன்னர் முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகி 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரையில் செல்லலாம் என இப்போது மதிப்பிடப்படுகிறது.
இவ்வாண்டின் கட்டுமானத் துறை 5 விழுக்காடு என்னும் சிறிய அளவிலான வளர்ச்சியை எட்டியது.
கடந்த ஆண்டின் நான்கு காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி தெரிய வந்துள்ளது.
கொவிட்-19 சூழல் காரணமாக முடக்கிவைக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுமான நடவடிக்கைகள் மீண்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு வளர்ச்சி சாத்தியமானதாக ஆய்வை மேற்கொண்ட சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனம் கூறியது.
மேலும், இவ்வாண்டு ஏப்ரல் மே மாதங்களில் தெற்காசிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது கட்டுமான நடவடிக்கைகளின் வேகத்தைத் தணித்துள்ளது.
வரும் காலாண்டுகளிலும் இத்துறையின் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றது இந்நிறுவனம்.
திறன்படைத்த ஊழியர்கள் போதுமான அளவில் கிடைக்காததன் காரணமாக ஊழியர்களுக்கான செலவுகள் கூடின. குறிப்பாக, இயந்திரம் மற்றும் மின்சாரம் தொடர்பான பணிகளில் இந்த செலவு அதிகரிப்பு காணப்பட்டது.
கட்டுமானத்திற்கான பொருட்கள் சிங்கப்பூரில் உயர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதம் உலோகக் கம்பி
களின் விலையில் 36.2 விழுக்காடும் சிமெண்ட் விலையில் 6 விழுக்காடும் உயர்ந்திருந்தன.
உலக விநியோகத் தொடரில் ஏற்பட்ட இடையூறுகள், அதிகரித்த தேவைகள், கட்டுமானப் பொருட்
களைப் பெறுவதில் போட்டி போன் றவை உலகச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அதன் தாக்கம் விலை ஏற்றத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஏறக்குறைய $5.7 பில்லியன் மதிப்புள்ள கட்டுமானக் குத்தகைகள் வழங்கப்பட்டதாக சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனத்தின் சிங்கப்பூர் சந்தை நிலவர அறிக்கை குறிப்பிட்டது. இது இதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் 0.1 விழுக்காடு குறைவு.