உணவுக்கடைகளின் சுத்தம் குறித்து மக்களிடையே திருப்தி குறைந்து வந்தாலும் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் பங்கை ஆற்றுவதில்லை.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் நடத்திய கருத்தாய்வில் காப்பிக் கடைகளில் உணவு உண்டபின், தட்டுகளை உரிய இடத்தில் வைப்போரின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவே எனக் காட்டுகிறது.
இந்த அதிர்ப்திக்குக் காரணம் நோய் தொற்றால் சுத்தம் செய்வதின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள விழிப்புணர்வே என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் கூறியுள்ளது.
நோய் தொற்றினால் பொது சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பேராசிரியர் போலீன் டே ஸ்ட்ரௌன் கூறினார். அவர் முனைவர் மேத்தியூ மேத்தியூசுடன் இக்காருத்தாய்வை மேற்கொண்டார்.
2,000 சிங்கப்பூர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமிடையே நடத்தப்பட்ட இக்கருத்தாய்வில் உணவங்காடி நிலையங்கள், குளிரூட்டி வசதியுள்ள உணவு நிலையங்கள் மற்றும் ஈரச் சந்தைகளின் சுத்தம் குறித்த திருப்தி 2019உடன் ஒப்பிடுகையில் 3.7% குறைந்துள்ளதைக் காட்டியது.
அநேகர் உணவங்காடி நிலையங்கள் ஈரச்சந்தைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
காப்பிக் கடையில் உணவருந்தவோரில் 46 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது தட்டுகளை உரிய இடத்தில் எடுத்து வைக்க வாய்ப்புள்ளது என்றும் கருத்தாய்வு காட்டியது. துப்புரவாளர்கள் தட்டுகளைத் தங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிடுவதே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் முதன்முறையாக இவ்வாண்டு பொதுக் கழிவறைகளின் சுத்தம் குறித்தக் கருத்தாய்வையும் நடத்தியது.
சிங்கப்பூர்களில் 81.6 விழுக்காட்டினர் திருப்தி அடைந்துள்ளதை அது காட்டியது.