பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் பணியாற்றும் 9,500 பேருந்து ஓட்டுநர்களில் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள வர்களின் விகிதம் 10%க்கும் கொஞ்சம் குறைவு என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
இருந்தாலும் அதனால் பேருந்துச் சேவைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
நிலப் போக்குவரத்து ஆணைய மும் பேருந்துச் சேவை நிறுவனங்களும் நடவடிக்கைகளைச் சீரமைத்து வளங்களைத் தேவைக்கேற்ப திருப்பிவிட்டதே சேவைகள் பாதிக்காமல் தொடர்ந்து இடம்பெற் றதற்கான காரணம் என்று போக்குவரத்து அமைச்சு மாநாடு ஒன்றையொட்டி பேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐந்து விரைவுப் பேருந்துச் சேவைகள் மட்டுமே மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் இதர சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த ஐந்து பேருந்துச் சேவைகளையும் கோ-அஹெட் நிறுவனம் நடத்துகிறது. அவை செப்டம்பர் 15ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பயணிகள் சிலருக்குக் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்படும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.