கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் புதிய விதி
முறையின்படி நேற்று முதல் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் உணவருந்த முடியாது.
ஆனால் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்துவதில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது. புதிய விதிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள பல உணவங்காடி நிலையங்களுக்கும் காப்பிக்கடைகளுக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நேற்று சென்றனர்.
சில இடங்களில் வாடிக்கை
யாளர்களின் தடுப்பூசி நிலை சரிபார்க்கப்பட்டதாகவும் சில இடங்களில் சரிபார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹவ்காங் 203 காப்பிக்கடையில் வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையைச் சரிபார்ப்பதில் அங்கு உள்ள உணவுக்கடைக்காரர்கள் மும்முரம் காட்டினர்.
காப்பிக்கடையில் உள்ள ஓர் உணவுக்கடையிலிருந்து இன்னோர் உணவுக்கடைக்குச் செல்லும்போது தமது தடுப்பூசி சரிபார்க்கப்படுவது எரிச்சலை ஏற்படுத்தியதாக வாடிக் கையாளர் திரு கே. டேங் தெரிவித்தார்.
"தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்தனர். ஆனால் டிரேஸ்டுகெதர் செயலியை அவர்கள் என்னிடம் காட்டவில்லை. தங்கள் கைபேசிகளை மேசையிலேயே வைத்துவிட்டதாக அவர்கள் கூறினர்," என்று ஹவ்காங் 203 காப்பிக்கடையில் உணவுக்கடை வைத்திருக்கும் 30 வயது திரு கோ லுவோ வெய் கூறினார். தடுப்பூசி நிலை குறித்து கேட்கும்போது வாடிக்கையாளர்கள் சிலர் கோபமடைந்ததாகவும் கடைக்காரர்கள் சிலர் தெரிவித்தனர். உணவு வாங்க இவ்
வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகப் பலர் முகம்
சுளித்ததாக உணவுக்கடைக்காரர்கள் கூறினர்.
தியோங் பாரு ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்திற்கு நேற்று காலை உணவு சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்களிடம் அவர்களது தடுப்பூசி நிலையை தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் சரிபார்த்
தனர். உணவங்காடி நிலையத்தில் சாப்பிட முடியாது என்றும் சாப்பாட்டை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெண் ஒருவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள ஃபுட்சிட்டி காப்பிக்கடைக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது வாடிக்கையாளர்
களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க அதிகாரிகளோ பாதுகாப்பு இடைவெளி தூதர்களோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கோவனிலும் தெம்பனிஸ் வட்டாரத்திலும் உள்ள உணவங்காடி நிலையங்களில் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்க பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்க வேண்டும் என்று யாரும் தங்களிடம் சொல்லவில்லை என்று உணவுக்கடைக்காரர்கள் சிலர் தெரிவித்தனர். உணவங்காடி நிலையங்களின் நுழைவாயிலில் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க வேண்டுமா என்ற சந்தேகம் தங்களுக்கு ஏற்பட்டதாக செய்தியாளர்களிடம் அவர்கள் கூறினர்.
அடிக்கடி மாறும் விதிமுறை குறித்து கோவன் 209 ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்தில் உணவுக்கடை வைத்திருக்கும் 65 வயது திரு வில்லியம் லிம் அதிருப்தி தெரிவித்தார்.