ஓர் ஆடவர் 2009ஆம் ஆண்டு தனது மகளை மானபங்கப்படுத்தி இருக்கிறார்.
அப்போது மகளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது.
எனினும், அச்சம்பவம் குறித்து அந்த நேரத்தில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்படவில்லை.
சம்பவத்தைப் பற்றி மகள் கூறியபோது தரமான ஆதாரம் இல்லை என்று தாய் சொன்னது இதற்குக் காரணம்.
சரியான ஆதாரம் இல்லாததால் புகார் கொடுத்து பலனில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அப்போது கூறியிருக்கிறார்.
இப்போது 18 வயதாகும் அந்தப் பெண், 2018ஆம் ஆண்டு காவல்துறைக்குப் புகார் அளித்தார்.
அடுத்த ஆண்டு தந்தை கைதுசெய்யப்பட்டார்.
இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.