கட்டுமான ஊழியரின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கவனக்
குறைவாக நடந்துகொண்ட கட்டுமானத்தள மேற்பார்வை அதிகாரிக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோங் சியூ ஃபூக், 55, எனப்படும் அந்த மலேசியர், ஸ்ப்ரிங்வியூ எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்தில் வேலை செய்தார்.
ஹவ்காங் பகுதியில் உள்ள அரூஸூ அவென்யூ பகுதியில் 2018 டிசம்பருக்கும் 2019 ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு மாடி வீடு ஒன்றை இடித்துக் கட்டும் திட்டத்தின் மேற்பார்வையாளராக அவர் இருந்தார்.
வீட்டை விதிமுறைப்படி இடிப்
பதற்கான வரைபடங்களுடன் கூடிய விவரங்கள் கோங்கிடம் தரப்பட்டன.
2019 மார்ச் 4ஆம் தேதி இரண்டாவது மாடியிலுள்ள சுவர்களை வெட்டி உடைக்குமாறு ஊழியர்
களுக்கு அவர் உத்தரவிட்டார். அந்தப் பணிகளை மேற்கொண்ட ஊழியர்களின் பெயர் சேன்டோ, பொன்னிர், டின் ஷஹாப் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டன.
சுவர்களை பாதுகாப்பு விதி
களின்படி ஊழியர்கள் உடைக்கிறார்களா என்பதைக் கவனிக்கத் தவறிய கோங், வேறொரு கட்டுமானத் தளத்திற்குச் சென்று விட்டார்.
ஊழியர்கள் கட்டடத்தை உடைத்துக்கொண்டிருந்த போது பால்கனியின் சிமெண்ட் பலகை (சிலாப்) உடைந்து விழுந்தது. அதனுள் சேன்டோ மாட்டிக்கொண்டார். மற்றோர் ஊழியரான பொன்னிர் தூக்கி எறியப்பட்டார்.
உடனடியாக அங்கு ஓடிவந்த மற்ற ஊழியர்கள் அகழ்பொறியால் சிமெண்ட் பலகையைத் தூக்கி சேன்டோவை வெளியில் இழுத்தனர். ஆனால் தலைக்
காயம் காரணமாக அவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பொன்னிர், பலவித எலும்பு முறிவுகளுக்காக 2 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.