திருவாட்டி சித்தி நூர் இமான் இரண்டு ஆண்டுகளாக வெளிநாடு செல்லவில்லை. கடைசியாக ஜனவரி 2020ல் தேனிலவுக்காக தென்ெகாரியாவில் அவர் 12 நாட்களை செலவழித்தார். தற்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வரும் செப்டம்பர் 15 முதல் 30 வரை அவர் மீண்டும் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இம்முறை தனது கணவர், ஒரு வயது மகளுடன் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வடிவமைப்பாளரான அவர், மெல்பர்ன் செல்லவிருக்கிறார். 2019 டிசம்பருக்குப் பிறகு அவர் தனது குடும்பத்தினரை இன்று வரை சந்திக்கவில்லை.
தலைப்புச் செய்தியாகியுள்ள பயணப் பிரச்சினைகள் பற்றி ேகட்டபோது, நாங்கள் எங்கள் பயணத்தை ஒத்திபோடவோ ரத்து செய்யவோ திட்டமில்லை என்று சித்தி உறுதியோடு கூறினார்.
இருந்தாலும் பாதுகாப்பான பயணத்திற்காக பயணக்காப்புறுதியை அவர் வாங்கிவைத்துள்ளார்.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட பல இடங்களில் அதிவேகமாகப் பரவக்கூடிய பிஏ.4, பிஏ.5 ஒமிக்ரான் துணைக் கிருமிகளால் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதே சமயத்தில் கடந்த சில மாதங்களாக விமான நிலையங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு பயணங்கள் அதிகரித்துள்ளன. பயணிகள் கோராத பயணப் பெட்டிகள் தேங்கிக் கிடக்கின்றன. சில இடங்களில் பயணப் பெட்டி களுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் பயணிகள் வெறுப்படைந்துள்ளனர்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், ஜூன் 20ஆம் தேதிக்கான விமானப் பயணங்களில் பத்து விழுக்காட்டை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் 90 விமானங்களில் பயணம் செய்யும் 15,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சிங்கப்பூரர்களை இத்தகைய இடையூறுகள் தடுத்துநிறுத்தவில்லை என்று பயணத் துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளனர்.
‘ஈயூ ஹாலிடேஸ்’ எனும் நிறுவனத்தின் சந்தைமய நிர்வாகியான மேண்டி சான், “கொவிட்-19 தொற்றுநோயுடன் வாழ்வதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனியும் அவர்களுக்கு அச்சமில்லை,” என்றார். இதையே வலியுறுத்திய ‘ஹோங் தாய் டிராவல்’ மூத்த சந்தைமய நிர்வாகியான ஸ்டெல்லா சோவ், சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு இறுதி வரை விடுமுறைக்கு முன்பதிவு செய்து வருகின்றனர் என்று கூறினார்.
ஆசியா எக்ஸ்பீடியா குழுமத்தின் பொதுத்தொடர்பு தலைவரான லாவினியா ராஜாராம், அனைத்துலகப் பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ளதை கண்கூடாகக் காண முடிகிறது என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் மாத விடுமுறையில் சிங்கப்பூர் குடும்பங்கள் செல்ல விரும்பும் இடங்களில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பாலி ஆகியவை பிரபலமாக விளங்குகின்றன என்று ‘சான் பிரதர்ஸ்’ மூத்த, சந்தைமய தொடர்பு நிர்வாகி ஜெரமையா வோங் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் சில சிங்கப்பூரர்கள் வெளிநாடுப் பயணங்களை மேற்கொள்வதில் இன்னமும் எச் சரிக்கையாகவே இருக்கின்றனர்.