கடந்த 43 ஆண்டுகளாக முயன்றும் கிடைக்காத தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச் சீட்டு இந்த ஆண்டு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ந்தார் திருவாட்டி ரேவதி கிருஷ்ணகோபால்,61.
அண்மையில் தமது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் தேசிய தின அணிவகுப்ப நிகழ்ச்சியை நேரடியாப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர்.
“எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு சிங்கப்பூரராக வாழ்வில் ஒரு முறையாவது தேசிய தின அணிவகுப்பை நேரில் காண வேண்டும் என்ற எனது ஆசை இன்று நிறைவேறியது” என்று பெருமிதம் கொண்டார் அவர்.
திருவாட்டி ரேவதியின் தங்கை திருவாட்டி கல்பனா செங்குட்டுவன்,48, தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் இதுவரை 28 முறை முயன்றும் கிடைக்காத நுழைவுச்சீட்டு இம்முறை கிடைத்ததை நினைத்து பூரிப்படைகிறார்.
“எத்தனை முறை தொலைக்காட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்காது. அதிலும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மனிதநேயத்தின் மகிமையை நாம் உணர்ந்த தருவாயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடியுள்ள இந்நிகழ்வில் பங்குகொண்டது மிகுந்த மார்கிஸ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார். இவர்களுடன் ரேவதியும் 12 வயது பேத்தி தர்ஷினி முரளிதரனும் வந்திருந்தார்.