கொவிட்-10 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து முதல் முறையாக 25,000 பேர் முன்னிலையில் தேசிய தினக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 9) கோலாகலமாக நடைபெற்றது.
மரினா பே மிதக்கும் மேடை சிவப்பு வெள்ளை கடல் போல காட்சியளித்தது.
கடந்த 2020, 2021ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் பெரும் கட்டுப்பாடுகளுக்கிடையே இடம்பெற்றன. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களிடையே அதிக பரபரப்பு இல்லாமல் தேசிய தினக் கொண்டாட்டங்கள் அப்போது நடைபெற்றன. சமூகத்தில் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்ததால் கடந்த ஆண்டின் தேசிய தின நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டியிருந்தது.
எனினும் இவ்வாண்டு கொவிட்-19 தொற்றுக்கு முந்திய காலம் போலவே விமரிசையாகக் கொண்டாட்டம் தொடங்கியது.
ரெட் லயன்ஸ் வான்குடை சாகசம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாவனை நிகழ்ச்சி, போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசம், இசை, நடனம், வாணவேடிக்கை என பல அம்சங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தாலும் சிங்கப்பூரின் தேசிய கீதம் ஒலித்தபோதும் பற்றுறுதி கூறியபோதும் பார்வையாளர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர்.
தேசிய தின நிகழ்ச்சி பற்றிய மேலும் விரிவான செய்திகளை நாளைய தமிழ் முரசு அச்சுப்பிரதியில் படிக்கலாம்.