தீப்பிடித்த தனிநபர் நடமாட்டச் சாதனம்: மருத்துவமனையில் ஒருவர்; பசியுடன் இருந்த பூனைகள்

பிப்பிட் சாலையில் உள்ள வீவக வீட்டு வாசலில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.

வீவக புளோக் 94ல் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 10) காலை இச்சம்பவம் நிகழ்ந்தது.

காலை 6.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் ஒருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மின்சாரம் சார்ந்த காரணங்களால் சாதனம் தீப்பிடித்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணை தெரிவித்தது.

இதே இடத்தில் சனிக்கிழமை (மார்ச் 11) மாலை இரண்டு தொண்டூழியர்கள் உணவு விநியோகித்துக்கொண்டிருந்தபோது பசியுடன் இருந்த சில பூனைகளைக் கண்டிருக்கின்றனர்.

அவை தீப்பிடித்த தனிநபர் நடமாட்டச் சாதனம் இருந்த வீட்டில் இருந்தவை எனக் கருதப்படுகிறது.

தொண்டூழியர்கள் அன்று மாலை அப்பகுதிக்குத் திரும்பி வந்தபோது தமது குடும்பம் 30 பூனைகளை வளர்ப்பதாகவும் தீ மூண்டதன் காரணமாக அவற்றைத் தத்துக்கொடுப்பது பற்றி யோசிப்பதாகவும் இளம் ஆடவர் ஒருவர் கூறியிருக்கிறார். 

இதைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பதாக விலங்குநல மருத்துவச் சேவையும் பூனைநல அமைப்பும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!