2003 ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தேசிய நாள் பேரணியில் உரையாற்றியபோது, அடுத்த பிரதமராக திரு லீ சியன் லூங்கை அமைச்சரவை தேர்ந்தெடுப்பதாக திரு கோ அறிவித்தார்.
2004 மே 22ஆம் தேதி இளம் அமைச்சர்கள் 10 பேர் ஏகமனதாக திரு லீயை கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவராக நியமித்தனர். 2004 ஆகஸ்ட் 12ல் திரு லீ, 52, பிரதமரானார்.
திரு லீ பிரதமராக தன்னை நன்கு நிலைநிறுத்திக்கொண்டு தேர்தலைச் சந்திக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்று திரு கோ தெரிவித்து இருந்தார்.
2006 பொதுத் தேர்தலில் 66.6% வாக்குகளுடன் திரு லீ தலைமையில் மசெக வென்றது. பிறகு 2011 மே 7ஆம் தேதி திரு லீ தலைமையில் மசெக 60.1% வாக்குகளைப் பெற்றது.
பாட்டாளிக் கட்சி முதல் குழுத்தொகுதியைக் கைப்பற்றியது.
2015 செப்டம்பர் 11 பொதுத் தேர்தலில் 69.9% வாக்குகளுடன் மசெக வென்றது. 2018 நவம்பர் 23ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த ஹெங் சுவீ கியட், 57, கட்சியின் முதல் உதவி தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 மே மாதம் அவர் துணைப் பிரதமரானார்.
2020 ஜூலை 10ஆம் தேதி நடந்த கொவிட்-19 பொதுத் தேர்தலில் திரு லீ தலைமையில் 61.2% வாக்குகளுடன் மசெக வென்றது. ஆனால் பாட்டாளிக் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது.
2021 ஏப்ரல் 8ஆம் தேதி திரு ஹெங், 60, நான்காம் தலைமுறைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார். மசெகவின் நான்காம் தலைமுறைத் தலைவராக திரு லாரன்ஸ் வோங், 49, தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திரு லீ, 70, அறிவித்தார்.