மறுபயனீட்டு ஆடை விற்பனை எல்லாருக்கும் வெற்றிகரமான முயற்சியாக அமைவதில்லை.
பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகளை விற்கும் கடையாகத் தொடங்கப்பட்ட 'வேதாஸ்ரீ டிசைன்ஸ்', கடந்த ஆண்டுமுதல் மறுபயனீட்டு ஆடை விற்பனை முயற்சியில் முழுவீச்சுடன் இறங்கியது. தங்களை வேறுபடுத்திக்காட்ட, வணிக முறையை மறுபரிசீலனை செய்தனர், கடையின் உரிமையாளர்
களான திருமதி ராஜேஸ்வரியும் திருமதி துர்காவும் (படம்).
புதிது போல இருக்கும் பயன்
படுத்திய ஆடைகளை விற்பதனால் அவர்களது வாடிக்கையாளர்கள் முழுதாக மாறிவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஒவ்வொரு தீபாவளிக்கும் புது வடிவமைப்பிலான இந்திய ஆடைகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக இறக்குமதி செய்துகொண்டிருந்தது இவ்வர்த்தகம். புதிய வரவுகளே வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம். தீபாவளி சமயத்தில் $5,000 வரையில் விற்பனை இருக்கும். மறுபயனீட்டு உடை விற்பனைக்கு மாறியதால், இந்த ஆண்டு விற்பனை மிகவும் மோசமாக இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.
"பயன்படுத்திய ஆடைகளை விற்பது குறித்து எங்களது வாடிக்கையாளர்களிடம் கேட்டபொழுது, பெரும்பாலோர் எங்களது முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்தனர்.
ஆனால், ஓராண்டாகியும், விரல்விட்டு எண்ணும் அளவிலான மறுபயனீட்டு ஆடைகளே விற்பனையாகியுள்ளன. அவற்றை வாங்க நம் சமூகத்தினர் இன்னும் தயாராகவில்லை," என்றார் திருமதி துர்கா தேவி சிவாஜி, 36.
மறுபயனீட்டு ஆடைகளை நன்கொடையாகவோ பணத்துக்காகவோ கொடுக்க பலர் முன்வந்ததால் ஏறத்தாழ 150 ஆடைகள் அவர்
களிடத்தில் குவிந்தன. ஆனால், பிறரின் ஆடைகளை வாங்குவதற்கு எல்லோரும் தயங்குவதாக இரு
வரும் உணர்ந்தனர்.
"மறுபயனீட்டு ஆடைகளை விற்க மாறுபட்ட வணிக உத்திகள் தேவை என்பதை அறிந்துகொண்டோம். வரும் காலத்தில் கூடு
தலாக, வெவ்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தும் திட்டத்துடன் உள்ளோம்," என்றார் திருமதி ராஜேஸ்வரி சாம்பசிவம், 39. வரும் 15ஆம் தேதியன்று, தங்களது மறு பயனீட்டு ஆடைகளை காட்சிப்படுத்த இருவரும் திட்டமிட்டுள்ளனர்.