எவியோன்: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி, ஐரோப்பிய கிண்ணத்துக்கும் குறி வைத்து நாளை அதிகாலை 3 மணிக்குக் களமிறங்குகிறது. தனது முதல் ஆட்டத்தில் உக்ரேனைச் சந்திக்கும் ஜெர்மனி போட்டியை வெற்றியுடன் தொ டங்க மிகுந்த முனைப்புடன் இருக்கிறது. இருப்பினும், உக்ரேனுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்ன தாகவே ஜெர்மனிக்கு சில பின்ன டைவுகள் ஏற்பட்டுள்ளன. வலிமையான தற்காப்புக்கு பெயர் போன ஜெர்மனி, நாளைய ஆட்டத்தில் முக்கிய தற்காப்பு ஆட்டக்காரர் மேட்ஸ் ஹியும்மல் இல்லாமல் எதிரணியை எதிர்கொள்ளும்.
காயம் காரணமாக ஓய்வு எடுத்துவரும் ஹியும்மலுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டோனியோ ருயுடிகருக்கும் போராத காலம். அவருக்கும் இந்த வாரம் முழங்காலில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரரும் அணித் தலைவருமான பேஸ்டியன் ஷ்வான்ஸ்டைகரும் காயம் காரணமாக களமிறங்கமாட்டார். இதனால் ஜெர்மனியின் தற்காப்பு பலவீனம் அடைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்து உள்ளது. இதைத் தங்களுக்குச் சாதக மாக்கிக்கொள்ள புயல் வேகத் துடன் விளையாடும் திறனைப் பெற்றிருக்கும் உக்ரேன் வீரர்கள் செயல்படுவர் என்பதில் சந்தேக மில்லை.