ராஞ்சி: வில்லியம்சன் தலைமை யிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தி யாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 6 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணி கள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது.