லிவர்பூல்: எவர்ட்டனுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி தோல்வியைத் தழுவியது. ரெனியேரிக்குப் பிறகு லெஸ் டரின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற ஷேக்ஸ்பியரின் முதல் தோல்வி இது. ஷேக்ஸ்பியர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆறு ஆட்டங்களாக வெற்றி பெற்று வந்தது லெஸ்டர். இந்நிலையில், நேற்றைய போட்டியில் எவர்ட்டனிடம் 4=2 எனத் தோல்வி அடைந்தது லெஸ்டர். ஆட்டத்தின் முதல் நிமிடத் திலேயே எவர்ட்டன் முதல் கோலைப் போட, அதை அடுத்த மூன்று நிமிடங்களில் சமன் செய்தார் லெஸ்டரின் சிலிமணி. 10வது நிமிடத்தில் கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பை பயன்படுத்தி லெஸ்டர் குழு, அடுத்த கோலைப் புகுத்த வெற்றி லெஸ்டருக்குத் தான் எனத் தோன்றியது.
பிரிமியர் லீக் போட்டியில் அதிக கோல்களைப் புகுத்திய டோட்டன்ஹம் வீரர் ஹேரி கேனின் எண்ணிக்கையை எட்ட லுகாகுவிற்கு (நடுவில்) இன்னும் நான்கு கோல்கள் மட்டுமே தேவை. படம்: ஏஎஃப்பி