போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திரக் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் காண 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மையத்தில் திரண்டிருந்தனர்.
அரீனா@ஓடிஹெச் விளையாட்டரங்கின் நுழைவாயில்களில் சுமார் 300 ரசிகர்கள் சுற்றி நின்றபோதும் அவர்களில் 200 பேர் மட்டும் யுவென்டஸ் குழுவைச் சேர்ந்த ரொனால்டோவைச் சிறிது நேரம் காண முடிந்தது. ரசிகர்களை கையசைத்து வரவேற்ற அவர், பின்னர் தனியார் காருக்குள் ஏறிச் சென்றார்.
இன்று அவர் யூமின் தொடக்கப்பள்ளிக்கும் சோங்சென் தொடக்கப்பள்ளிக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுடன் உரையாடினார்.
34 வயது ரொனால்டோ நேற்று முன்தினம் சிங்கப்பூரில் தரையிறங்கிறதாக ‘தி நியூ பேப்பர்’ தெரிவித்தது.
(படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)