லண்டன்: ஆர்சனல் குழுவின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் மிக்கெல் அர்டேட்டா தமக்கு ஏற்பட்ட கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தான் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் குழுவை நிர்வகிக்கும் பணியில் மீண்டும் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் தம்மால் மற்றவர்களுக்கும் இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்குமோ எனத் தாம் அஞ்சியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்சனல் குழு மான்செஸ்டர் சிட்டி குழுவுடன் மோதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இம்மாதம் 12ஆம் தேதி அர்டேட்டாவுக்கு கொரோனா கிருமித்தொற்று கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டிகளில் பிப்ரவரி மாத இறுதியில் கிரேக்க நாட்டின் ஒலிம்பியாக்கோஸ் குழுவுடன் ஆர்சனல் மோதியபோது தமக்கு கிருமித் ெதாற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அர்ேட்டடா கூறினார்.
“இப்பொழுது நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன்.
“ஒலிம்பியாக்கோஸ் குழுவிலிருந்து எங்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தொலைபேசி வழி தெரிவிக்கப்பட்டபோது அதற்கான அறிகுறி என்னிடம் தென்பட்டது உண்மையே.
“என்னவென்று தெரியவில்லை, ஆனால் எனக்குள் ஏதோ ஒன்று இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது.
“அப்புறம்தான் எனக்குத் தோன்றியது. ஐயோ, இங்கு எல்ேலாருக்கும் இந்தக் கிருமித்தொற்று பரவியிருக்கக்கூடும் என்றும் யார் யார் நம்முடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்று எண்ண ஆரம்பித்ததும் அவர்களில் யார் யார் நமது சொந்தங்கள் என்றும் யோசிக்கத் தோன்றியது. அந்த சமயம்தான் அச்சம் தலைதூக்கியது. அறிகுறிகளைப் பொறுத்தவரை, எனக்கு சாதாரண கிருமித்தொற்றாகவே இருந்தது. மூன்று, நான்கு நாட்களுக்கு சிறிதளவு காய்ச்சல், வறட்டு இருமல் என சிறிது சிரமமாக இருந்தது, அவ்வளவுதான்,” என்று தமது சமூக வலைத்தளத்தில் பதிவு ெசய்துள்ளார். அர்டேட்டாவின் மனைவி, பணிப்பெண் ஆகியோருக்கும் இந்தக் கிருமித்தொற்று கண்டிருந்த நிலையில் அவரின் மூன்று பிள்ளைகளுக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.