மும்பை: ஐஎஸ்எல் காற்பந்து தொடரில் 10வது பருவப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மும்பை சிட்டி எப்சி, மோகன் பகான் எஸ்ஜி, ஒடிசா எப்சி, கோவா எப்சி,கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, சென்னையின் எப்சி ஆகிய 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
3 முதல் 6வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடும். இதில் இருந்து இரு அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் தேதிகளை போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி மே 4ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.