சேலம் பனமரத்துப்பட்டி அருகே தும்பிப்பட்டியை சேர்ந்த விவசாயி மணி என்கிற மாரிமுத்து கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே கிடந்த வானொலிப் பெட்டியை எடுத்து வந்து அதற்கு மின் இணைப்பு கொடுத்து பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அது திடீரென வெடித்து சிதறியதால் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவத்தில் மணியின் 12 வயது பேத்தி சவுரதியும் மேலும் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
சிறுமி சவுரதியின் குடல் சரிந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சிறுமி சவுரதி, 12 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் தொடர்பில் மணியின் அண்ணன் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாய நிலத்திற்கான வழித்தட தகராறில் சொந்த அண்ணனைக் குறி வைத்து வானொலிப் பெட்டியில் வெடிகுண்டு வைத்து வெங்கடேசன் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.