இடமில்லாததால் 44 மீனவர்களை ஈரானில் விட்டுவிட்டு தமிழகத்துக்கு கிளம்பிய கப்பல்; விமானம் மூலம் மீட்க கோரிக்கை

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அனைத்துலக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 750 மீனவர்கள், உணவு, தங்குமிடம் இல்லாமல் தமிழகம் திரும்ப முடியாமல் அங்கு தவித்து வந்தனர்.

அவர்களை மீட்க கப்பல் ஒன்றை இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக, ஒவ்வொரு மீனவரும் பயணக்கட்டணம் உட்பட ரூ.10,000 செலவை ஏற்க வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “கப்பலில் இடமில்லை,” என்ற காரணத்தைக் கூறி 44 தமிழக மீனவர்களை அங்கேயே விட்டுவிட்டு கப்பல் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டது.

கப்பலில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரை பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்கள் அரசுரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த 44 பேரையும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மீனவர்களிடம் அதற்கான கட்டணத்தைக் கோரக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், அதுவரை ஈரானில் அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!