மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 80 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த நுழைவாயில் ஒன்று இன்று திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியவில்லை.
கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள்.
மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுர நுழைவாயிலுக்கு அருகே இந்த நுழைவு வாயில் அமைந்துள்ளது.
இந்த வாயில் மூலம் மிக எளிதாக, நேரடியாக கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.
மக்கள் கூட்டம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த வாயில் திறக்கப்படாமல் இருந்தது.
சுத்தப்படுத்தி, வழிபாடுகள் செய்து இந்த வாயிலை திறக்க உள்ளனர்.
முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த வாயில் இப்போது திறக்கப்படுவதற்கான காரணம் தெரியவில்லை. வரும் நாட்களில் இந்த வாயில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுமா என்பது தெரியவில்லை.