சென்னை: சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக பலகோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் செந்தில் என்பவர் அப்படி புகார் தெரிவித்ததை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இப்போது செயல்படு கிறார்.