திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் உள்ள ஒரு தேநீர் கடையில் ேநற்று அதிகாலையில் எரிவாயு உருளை வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை உடனடியாக அணைக்க முடியாததால், பக்கத்தில் உள்ள ஏழு கடைகளிலும் தீ பற்றி எரிந்தது.
இதனால், கடைகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தக வல்கள் தெரிவித்தன.
இவ்விபத்தில் சிக்கியவர்கள் விவரம் தெரிய வரவில்லை.
ஏறக்குறைய 2,000 கடைகளைக் கொண்ட காந்தி சந்தைப் பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள் கள் அனுப்பப்படுகின்றன.
இந்தச் சந்தையின் நுழைவாயில் பகுதியில் உள்ள தேநீர் கடையில் எரிவாயு உருளை வெடித்ததில் விபத்து ஏற்பட்டது.
இந்த தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அருகில் இருந்த தேங்காய் கடை, இனிப்பு மிட்டாய் கடை, பாதாம் பால் கடை, பெட்டிக்கடை, மின்சாரக் கடை, மளிகைக் கடைகளும் எரியத் தொடங்கின. பூட்டப்பட்டிருந்த கடைகளில் இருந்து வெளியான புகை அந்தப் பகுதியையே புகை மண்டலமாக மாற்றியது.
20க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மற்றொரு தீவிபத்து:
தங்க நகை, பணம் நாசம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் பால்பண்ணை ஊழியர் ரமேஷ், 45, என்பவரது வீட்டில் வீடு கட்டுவதற்காக பல ஆண்டாக சேமித்து வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ 1 லட்சம் ரொக்கப் பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றி ருந்ததால் உயிர் தப்பினர்.
திருச்சியில் 100 ஆண்டுகள் பழமையான காந்தி சந்தை அமைந்துள்ளது. இந்தச் சந்தையின் நுழைவாயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின. உயிரிழப்பு குறித்து தகவலில்லை.
படம்: ஊடகம்