ஆற்றின் நடுவே ரூ.2 லட்சம் செலவில் பாலம் அமைத்த மக்கள்

தம்­மம்­பட்டி: கெங்­க­வல்­லி­யில் பாலம் கட்­டித் தரும்­படி மக்­கள் பல­முறை கோரிக்கை விடுத்­தும் இதுவரையும் எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­த­தால் மக்கள் அனைவரும் சொந்தமாக நிதி திரட்டி ரூ.2 லட்­சம் செலவில் தற்கா­லி­கப் பாலத்தை அமைத்­துள்­ள­னர்.

கெங்­க­வல்லி அருகே சுவேத நதிக்­க­ரை­யோ­ரம் சுமார் 200 குடும்­பத்தி­னர் வசிக்­கின்­ற­னர். இவர்கள் இந்த சுவேத நதி­யைக் கடந்­து­தான் கெங்­க­வல்லி பகுதிக்குச் செல்லவேண்­டும். ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் போதெல்­லாம் மக்­கள் 5 கி.மீ. தூரம் சுற்­றித்­தான் செல்­ல­வேண்­டும்.

இந்­நி­லை­யில், இப்­ப­கு­தி­யைச் சேர்ந்த 200 குடும்­பங்­கள் தலா ரூ.1,000 வீதம் பணம் சேகரித்து ரூ.2 லட்­சம் செல­வில் சிமெண்ட் குழாய்­களை வாங்கி, அவற்றை ஆற்­றின் குறுக்கே பதித்து, அதன் மேல் மண்­கொட்டி தற்­கா­லிகப் பாலத்தை அமைத்­துள்­ள­னர்.

இனியாவது, அரசு எங்­களது கோரிக்­கைகளை ஏற்று இங்கு நிரந்தர பாலத்தை கட்­டித்­த­ர­வேண்­டும் என்­று கோரியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!