சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றும் உருமாறிய ஓமிக்ரான் தொற்றும் மக்களை ெநருங்கவிடாமல் தடுக்கும் வகையில், வரும் 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அத்துடன், புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
மாநிலத்தில் கொவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கம் ஒரு கட்டுக்குள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்தச் சூழலில், கொவிட்-19 தொற்றும் உருமாறிய ஓமிக்ரான் ெதாற்றும் தமிழக மக்கள் மத் தியில் மீண்டும் இப்போது புதிய தலைவலியாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், பாலர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை,
ஆங்காங்கே நடைபெற்று வந்த பொருள்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
திரையரங்கங்கள் 50% பார்வையாளர்களுடன் செயல்படவும் மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் வழக்கம் போல் திறந்திருக்கலாம்.
உணவகங்கள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சுபநிகழ்வுகளில் 100 பேரும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேரும் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.