சென்னை: ஓமிக்ரான் தொற்று வகையைக் கண்டறிவதற்கான மரபணு சோதனைக்கு மாதிரி அனுப்புவதை தமிழக அரசு நிறுத்திவிட்டதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவத் தொடங்கியது முதல், மரபணு சோதனைக்காக பெங்களூரு, புனே ஆய்வகங்களுக்கு மாநில மருத்துவத்துறையினர் மாதிரிகளை அனுப்பி, முடிவுகளைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையைப் பொறுத்தவரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்
படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
"உதாரணமாக, ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் கிங்ஸ் மருத்துவமனையில் தலா 250 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"இவர்கள் யாருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படவில்லை. மேலும் அவர்களுக்கு உயிர்வாயு தேவை (ஆக்சிஜன்) ஏற்படவில்லை. அனை வரும் நலமுடன் உள்ளனர்.
"மரபணு சோதனைக்கு மாதிரி கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் 85 விழுக்காட்டினருக்கு ஓமிக்ரான் தொற்றும் 16 விழுக்காட்டினருக்கு டெல்டா தொற்றும் உறுதியாகி வருகின்றன.
"ஓமிக்ரான் மரபணு பரிசோதனை முடிவு வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து விடுகின்றார். இதனால், மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதை நிறுத்திவிட்டோம்.
"டெல்டாவும் ஓமிக்ரானும் இணைந்து இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றன. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
"மேலும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதில் அடுத்தவாரம் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
"இப்போதைக்கு முழுஊரடங்கு தேவையில்லை. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு போதும். ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என முதல்வர் வலியுறுத்தி உள்ளார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒவ் வொரு வாரமும் முழுஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை," என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
மா.சுப்பிரமணியன்: விரைவாக குணமடைவதால் ஓமிக்ரான் மரபணு பரிசோதனை நிறுத்தம்