கிலோ ரூ.120: தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

கிலோ ரூ.120: தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

1 mins read
e7a2ce29-4e3f-425f-9121-4be119f0812a
கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் ஒரு கிலோ தக்­காளி 40 ரூபாய்க்கு விற்­கப்­பட்டு வந்த நிலை­யில், படிப்­ப­டி­யாக விலை உயர்ந்து நேற்று முன்­தி­னம் 100 ரூபா­யைக் கடந்­தது. அத­னால் குறை­வான விலை­யில் தக்­காளி கிடைக்க தமி­ழக அரசு ஏற்­பாடு செய்து வரு­கிறது.

கூட்­டு­ற­வுத் துறை நடத்தி வரும் 65 பண்­ணைப் பசுமை நுகர்­வோர் கடை­களில் சந்­தை­வி­லையை விடக் குறைந்த விலை­யில் தக்­காளி விற்­பனை செய்­யப்­படும் என அமைச்­சர் பெரி­ய­சாமி தெரி­வித்­துள்­ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், தமி­ழ­கம், ஆந்­திரா, கர்­நா­டகா மாநி­லங்­களில் மழை பெய்து வரு­வ­தால் தக்­காளி வரத்­துக் குறைந்து, ஒரு கிலோ 120 ரூபாய் வரை வெளிச்­சந்­தை­யில் விற்­ப­னை­யா­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

விலை­யைக் கட்­டுப்­ப­டுத்­த சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்­டங்­களில் கூட்­டு­ற­வுத் துறை­யின் பண்­ணைப் பசுமை நுகர்­வோர் கடை­களில் ஒரு கிலோ தக்­காளி 85 ரூபாய் வரை குறைக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

மேலும், நியா­ய­வி­லைக் கடை­கள் மூல­மா­க­வும் தக்­கா­ளியை விற்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார் பெரி­ய­சாமி.