சென்னை: ெசன்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த பாலசந்தரை, 30, நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டது. இந்தக் கும்பலைத் தேடும் பணியில் ஏழு தனிப்படை காவ லர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பாலசந்தர், பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணியின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அவரது பாதுகாப்புக்குச் சென்ற காவலர், கவனக்குறைவாக இருந்ததால் பணியிடை நீக் கம் செய்யப்பட்டு உள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், அவர்களது நண்பன் கலைவாணன் அகியோர் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.
விசாரணையில், பாலசந்தரின் உறவினர் ஒருவர், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். அந்த துணிக்கடை உரிமையாளரை ரவுடி பிரதீப்பின் மனைவியும் உறவினர்களும் மிரட்டி மாதாமாதம் துணி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுபோல் அடிக்கடி புதுத் துணிகளை எடுத்துக்ெகாண்டு பணம் கொடுக்காமல் இருந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர் பாலசந்தரிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாலசந்தருக்கும் பிரதீப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாகச் சொல்லப்படு கிறது. பாலசந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப் பேட்டை சாமிநாயக்கர் ெதருவில் நண்பர்களுடன் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, பாலசந்தருக்கு பாது காப்பு வழங்கும் காவலர் பாலகிருஷ்ணன் தேநீர் அருந்தச் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் பாலசந்தரை வெட்டிவிட்டு தப்பிய நிலையில், பாலசந்தர் உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.
கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.