பிரதமருக்கு கறுப்புக்கொடி: காங்கிரஸ் கட்சி போராட்டம்

காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் சென்னை மெரினா கடற்கரை

சென்னை: பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க இன்று சென்­னைக்கு வருகை தரும் பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் கறுப்­புக்­கொடி காட்டும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதை­ய­டுத்து மெரினா கடற்­க­ரைக்கு காவல்­துறை சீல் வைத்­துள்­ளது.

காவல்­து­றை­யின் தடையை மீறி காங்­கி­ரஸ் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற உள்­ள­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யாகி உள்ளது.

காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தி­யின் எம்பி பதவி அண்­மை­யில் பறிக்­கப்­பட்­டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் நாடு தழு­விய அள­வில் காங்­கி­ர­சார் பல்­வேறு போராட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்­ற­னர். குறிப்­பாக பிர­த­மர் மோடி எந்த மாநி­லத்­துக்­குச் சென்­றா­லும் அங்கு அவ­ருக்கு கறுப்புக்­கொடி காட்­டும் போராட்­டம் நடத்­தப்­ப­டு­கிறது.

இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மீனம்­பாக்­கம், சென்ட்­ரல், மெரினா கடற்­க­ரை­யில் உள்ள விவே­கா­னந்­தர் இல்ல அரங்­கம், பல்­லா­வ­ரம் ஆகிய இடங்­களில் நடக்­கும் நிகழ்ச்­சி­களில் அவர் பங்­கேற்­கி­றார்.

இதை­ய­டுத்து இந்த நான்கு இடங்­க­ளி­லும் காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் திர­ளா­கக் கூடு­வர் என்றும் பிர­த­ம­ருக்­குக் கறுப்­புக்­கொடி காட்டி தங்­க­ளு­டைய எதிர்ப்பை பதிவு செய்­வார்­கள் என்­றும் காங்­கி­ரஸ் கட்சி தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இன்று பொது­மக்­கள் மெரினா கடற்­க­ரைக்கு வரு­வதை தவிர்க்க வேண்­டும் என்று காவல்­துறை அறி­வு­றுத்தி உள்­ளது.

காவல்­து­றை­யின் அனு­ம­தி­யின்றி போராட்­டம் நடத்த காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது. பிர­த­மர் பங்­கேற்­கும் கூட்­டங்­க­ளுக்­குள் ஊடு­ருவி மறைத்து வைத்­துள்ள கறுப்­புக்­கொடி காட்ட காங்­கி­ர­சார் முயற்சி செய்­யக்­கூடும் என உள­வுத்­துறை எச்­சரித்துள்­ளதை அடுத்து, சென்னை மாந­க­ரில் காவல்­துறை சுற்­றுக்­கா­வல் நட­வ­டிக்­கையை தீவி­ரப்­ப­டுத்த உள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

மொத்­தம் 26 ஆயி­ரம் காவ­லர்­கள் இன்று பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர்.

விமான நிலை­யத்­தில் இருந்து சென்னை கடற்­கரை வரை காரி­லேயே பய­ணம் மேற்­கொள்ள இருக்­கி­றார் பிர­த­மர் மோடி. எனவே சாலை­யின் இரு­பு­றங்­க­ளி­லும் பாஜ­க­வி­னர் திர­ளா­கக் கூடி நின்று அவ­ருக்கு சிறப்­பான வர­வேற்பை அளிக்க உள்­ள­னர்.

எனி­னும், பாஜ­க­வி­ன­ருக்கு மத்­தி­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரும் ஊடு­ருவ வாய்ப்­புள்­ள­தா­க­வும் பிர­த­ம­ருக்கு கறுப்­புக்­கொடி காட்ட முயற்சி செய்­வர் என்­றும் உள­வுத்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

பிர­த­ம­ருக்கு எதி­ரான போராட்­டத்­தில் காங்­கி­ர­சார் திர­ளா­கப் பங்­கேற்க அக்­கட்­சி­யின் சட்­டப்­பே­ர­வைக் குழுத் தலை­வர் செல்வப் பெருந்­தகை அழைப்பு விடுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!