சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீரெனப் பதவி விலகி உள்ளார். இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சண்முகசுந்தரம் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அரசுப் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அவர் தனது வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக பணியாற்றியுள்ள சண்முகசுந்தரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பிளஸன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, லண்டன் ஓட்டல் வழக்கு, பேரறிவாளனின் சிறை விடுப்பு வழக்கு, உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.