சிங்கப்பூரில் 586,000க்கும் அதிகமானவர்கள் 2022 டிசம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி இரு திறன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு கடைசியாக டிசம்பர் 12ஆம் தேதி இது பற்றி தகவல் தெரிவித்த பின்னர் கூடுதலாக 200,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஃபைசர்-பயோடெக்/கமிர்னாட்டி இரு திறன் தடுப்பூசியை இதுவரை 133,000க்கும் அதிகமானவர்கள் ஒரு முறை போட்டுக்கொண்டனர்.
மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் இரு திறன் தடுப்பூசியை 453,000க்கும் மேற்பட்டவர்கள் போட்டுக் கொண்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சு இதைத் தெரிவித்தது.
இரு திறன் தடுப்பூசிகள் முதன்முதலில் தோன்றிய சார்ஸ்-சிஓவி-2 கிருமி வகை, ஓமிக்ரான் கிருமி வகை ஆகியவற்றுக்கு எதிராகத் தடுப்பபாற்றல் அளிக்கிறது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதிபெற்ற 39,000 முதியவர்கள் இன்னமும் குறைந்தபட்ச பாதுகாப்பைப் பெறவில்லை என்று அமைச்சு கூறியது. டிசம்பர் நடுவில் இந்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது.
கொவிட்-19க்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பு பெற, ஐந்து வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்கள் எம்ஆர்என்ஏ வகை அல்லது நோவோவேக்ஸ்/நுவேக்சோவிட் தடுப்பூசிகளை மூன்று முறை போட்டிருக்க வேண்டும்.
அல்லது அவர்கள் சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசியை நான்கு முறை போட்டிருக்க வேண்டும்.
அத்துடன் தடுப்பாற்றல் காலாவதியாக இருப்பதற்கு, கடைசியாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மாதத்திலிருந்து ஓராண்டுக்குள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதிபெற்ற சிங்கப்பூர் மக்களில் 60 விழுக்காட்டினரின் தடுப்பாற்றல் காலாவதியாகாமல் செயல்பட்டு வருகிறது.
சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் இத்தகவலைத் தெரிவித்திருந்தது.