கண்ணீர்ப் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஹாங்காங் அதிகாரி கள் நேற்று தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய உத்தேச ‘நாடு கடத்தும்’ சட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் கலவரத்தை அறிவித்ததை அடுத்து, அவர்கள் மீது போலிசார் முதலில் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். அந்தச் சட்டத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப் பட்டதையடுத்து, அரசாங்கத் தலைமை யகத்துக்கு வெளியில் கூடி முக்கிய சாலைகளை மறைத்த போராட்டக்காரர் கள் மீது மிளகு தெளிப்பான், கண்ணீர்ப் புகை ஆகியவற்றை போலிசார் வீசினர்.
தண்ணீர்ப் புட்டிகள், போக்குவரத்து கூம்புகள் போன்றவற்றை வீசிய போராட் டக்காரர்கள் அந்தச் சட்டத்தை மீட்டுக் கொள்ளும்வரை போராடப்போவதாக கோஷம் எழுப்பினர்.
“வேறு வழியின்றி ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று,” என்று போலிஸ் ஆணையர் ஸ்டீபன் லோ வாய் சுங் கூறினார்.
அந்தச் சட்டம் நேற்று நாடாளு மன்றத்தில் வாசிக்கப்பட இருந்தது. அதனைத் தள்ளிவைத்ததை எதிர்க் கட்சிகள் கொண்டாடியதாக புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.
“நீங்கள் அதிசயம் புரிந்துள்ளீர்கள். உங்களது போராட்டத்தால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று லேபர் கட்சியைச் சேர்ந்த ஃபெர்னேன்டோ சியுங் கூட்டத்தினரைப் பார்த்து ஆர்ப்பரித்தார். ஆனால், ஹாங்காங் அரசாங்கத்துக்கு சீனாவின் ஆதரவு தொடரும் என்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹெங் ஷுவாங் செய்தியாளர்களிடம் கூறினார். சீனாவிலிருந்து கூடுதல் துருப்புகளை ஹாங்காங்குக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுவது போலிச் செய்தி என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு அந்தச் சட்டத்தில் 3 மாற்றங்களைச் செய்திருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.