இந்தோனீசியாவின் ஜம்பி தீவில் காட்டுத் தீயால் ஏற்படும் புகைமூட்டம் எல்லை மீறி சொந்த நாட்டை மட்டுமின்றி அண்டை நாடுகளையும் பாதிக்கிறது. வானத்தின் நிறம் இங்கு மாறியதற்கு ‘ரேலே ஸ்கேட்டரிங்’ என்ற இயற்கை தோற்ற நிகழ்வு காரணம் என பேரிடர் நிர்வாகத்திற்கான இந்தோனீசியாவின் தேசிய வாரியத்தின் தகவல்துறைத் தலைவர் ஆகுஸ் விபோவோ சோயெட் தெரிவித்தார்.
“புகை, தூசு, மாசுத்துகள்கள் ஆகியவற்றால் சூரிய ஒளி சிதறடிக்கப்படும்போது ‘ரேலே ஸ்கேட்டரிங்’ என்ற நிகழ்வு ஏற்படுகிறது. அடர்த்திமிக்க அந்தப் புகைமூட்டம், சவ்வுபோல சிறிய அலை நீளம் உள்ள கதிர்களைப் பரவவிடாமல் மறைத்து, நீளமான அலை நீளம் உள்ள கதிர்களை வீச்சும். இந்த நீளமான கதிர்கள் ஆரஞ்சு-சிவப்பு அலைக்கற்றையில் ஒளியை வீசுவதால் அந்த வானமே மங்கலாகவும் சிவந்த நிலையிலும் காட்சியளிக்கிறது,” என்றார் திரு ஆகுஸ்.
காவி நிறமாக மாறிய வானத்தைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.