தென்கிழக்கு பாகிஸ்தானில் ரயில் தீப்பிடித்ததில் குறைந்தது 73 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கராச்சியிலிருந்து லாகூர் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலுக்குள், சமையலுக்காகப் பயணிகள் பயன்படுத்திய எரிவாயுக் கலன் திடீரென வெடித்தது.
அனுமதியில்லாமல் ரயிலுக்குள் கொண்டுசெல்லப்பட்ட இந்தக் கலன், அதிகாரிகளின் கவனத்திலிருந்து எப்படி தப்பியது என்பதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தானிய ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷிட் அகமது தெரிவித்தார்.
எரிவாயுக் கலன் வெடித்ததில் குறைந்தது மூன்று ரயில் பெட்டிகள் தீப்பற்றின. வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த ரயிலிலிருந்து பலர் குதித்து மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளன.
மேலும் பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்ததால் மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று திரு அகமது கூறினார்.