தாதியர் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு தேசிய தின அணிவகுப்பில் வீரவணக்கம்

இந்த ஆண்டு சிறு அளவிலான ஏற்பாட்டுடன் இரண்டு பகுதிகளாக நடக்கும் தேசிய தின அணிவகுப் பில் சிங்கப்பூர் ஆயுதப்படை மற்றும் போலிஸ் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் பங்கெடுப்பர். அணிவகுப்பின் முதல் ஒத்திகை இன்று நடந்தது. அதில் பல புதிய அம்சங்களைக் காண முடிந்தது. கொவிட்-19 சூழலில் செயல்பட்ட முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு வீரவணக்கம் செலுத்தப்படும். பீரங்கி முழக்கத்துடன் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக பாடாங்கில் இடம்பெறும்.

தேசிய தினம் நாடெங்கும் கொண்டாடப்படுவதைக் குறிக்கும் வகையில் பாடாங்கில் தேசிய கொடி ஏற்றப்படும் அதே நேரத்தில் நாடு முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு சிறிய அளவில் இருந் தாலும் கண்ணியமானதாக இருக் கும் என்று ஏற்பாட்டுக் குழு நம்பு கிறது. சென்ற ஆண்டு அணிவகுப் பில் 38 அணிகள் அணிவகுத்துச் சென்றன. ஆனால் இந்த ஆண்டு 4 அணிகள் மட்டுமே அணிவகுத் துச் செல்லும். கொவிட்-19 காரணமாக அணிவகுப்பு வீரர்களுக்கு இடை யில் இடைவெளி வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று இந்த ஆண்டிற்கான அணிவகுப்புத் தள பதி லெஃப்டினென்ட் கர்னல் நிக்க லஸ் ஓங் தெரிவித்தார். முகக்கவசம் அணிந்தபடி அவர் அணிவகுப்பு தளபத்திய கட்டளை களைப் பிறப்பிப்பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!