தனிநபர் தரவு பயன்பாடு: மசோதா நிறைவேறியது

தனி­ந­பர் தொடர்­பு­ தட­ம­றி­தல் தர­வு­க­ளின் பயன்­பாட்­டைக் கட்டுப்படுத்தும் மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு­ம­ன­தாக நிறை­வே­றி­யது.

மூன்று வாசிப்­பு­க­ளுக்கு விடப்­பட்ட மசோதா தொடர்­பாக மன்­றத்­தில் கார­சார விவா­தம் இடம் பெற்­றது. ஆளும் தரப்­பி­ன­ரு­ம் எதிர்த்­த­ரப்­பி­ன­ருமாக 18 உறுப்­பி­னர்­கள் அந்த விவா­தத்­தில் பங்­கேற்­ற­னர்.

திருத்த மசோதா மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­ட­தால் சட்­டத்­தில் திருத்­தப்­படும் அம்­சங்­கள் இம்­மா­தம் நடுப்­ப­கு­தி­வாக்­கில் நடப்­புக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, இந்த மசோ­தாவை அர­சாங்­கம் அவ­ச­ர­மாக அறி­மு­கம் செய்­வ­தன் நோக்­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சந்­தே­கத்­தைப் போக்­கு­வதே என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் (படம்) தெரி­வித்­தார்.

மசோதா குறித்து விளக்­கிய அவர், தர­வு­கள் முறை­யா­கப் பாது­காக்­கப்­பட்டு பொருத்­த­மான கார­ணங்­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் என்ற உறு­தி­மொ­ழியை வழங்­கி­னார்.

கொவிட்-19 தொடர்பு தட­ம­றி­த­லுக்­கும் ஏழு வகை­யான கடும் குற்­றங்­கள் தொடர்­பான புலன்­வி­சா­ர­ணக்­கும் பயன்­ப­டுத்­தும் வகை­யில் அத்­த­கைய தர­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் மசோதா மீது நேற்று மன்­றத்­தில் விவா­தம் தொடங்­கி­யது.

பொது­மக்­க­ளைப் பாது­காப்­ப­தோடு பாது­காப்­பைப் பரா­ம­ரிக்­கும் நோக்­கம் கொண்­டது கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்கை) திருத்த மசோதா என்று டாக்­டர் விவி­யன் அப்­போது விளக்­கி­னார்.

பொது­மக்­க­ளின் டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­க­ளைப் பாது­காப்­பது, கடு­மை­யான குற்­றங்­க­ளுக்­குத் தீர்வு காண அதி­லுள்ள தக­வல்­

க­ளைப் பயன்­ப­டுத்த போலி­சுக்கு அனு­மதி அளிப்­பது ஆகிய இரண்­டுக்­கும் இடை­யி­லான சம­நி­லையை அந்த மசோதா கோரும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அறி­வார்ந்த தேசத் திட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு விவி­யன், இந்த மசோதாவை சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம் சார்­பாக திங்­க­ளன்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார்.

அவ­சர மசோ­தா­வாக இது தாக்­கல் செய்­யப்­பட்­டது. இதற்கு அதி­ப­ரால் கையொப்­ப­மி­டப்­பட்ட அவ­ச­ரத்­தன்மை சான்­றி­தழ் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும். மன்­றத்­தில் வெவ்­வேறு அமர்­வு­களில் வாசிப்­பு­களை நிகழ்த்­து­வ­தற்­குப் பதி­லாக ஒரே அமர்­வில் மூன்று வாசிப்­பு­களை நிகழ்த்த இது அனு­ம­திக்­கும்.

அசா­தா­ர­ண­மான வேளை இது என்­றும் தவிர்க்­க­மு­டி­யாத சூழல் இது என்­றும் குறிப்­பிட்ட அமைச்­சர், “கொள்­ளை­நோயை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்­டத்­தின் மீது நாம் நமது கவ­னத்­தைத் தொட­ரும் நோக்­கத்­தி­லேயே மசோதா அவ­ச­ர­மாக அறி­மு­கம் செய்­யப்­ப­டு­கிறது,” என விளக்­கி­னார்.

குற்­ற­வி­யல் தண்­ட­னைத் தொகுப்­பு­களில் இருந்து டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் விதி­வி­லக்­குப் பெறாது என்று அறி­விக்­கத் தவ­றி­யதை அர­சாங்­கம் ஒப்­புக்­கொண்­டி­ருப்­ப­தாக டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

“இந்­தத் தவற்­றுக்கு நான் முழுப்­பொ­றுப்பு ஏற்­கி­றேன். எனது தவற்­றால் ஏற்­பட்ட கலக்­கத்­துக்­கும் பதற்­றத்­துக்­கும் நான் மிக­வும் வருந்­து­கி­றேன்,” என்று அவர் மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

“கிரு­மிப் பர­வல் என்­பது வள­ரும் மிரட்­டல். சில காலத்­துக்கு இது நீடிக்­கும். எனவே இது ஒரு முக்­கி­ய­மான கால­கட்­டம். கொவிட்-19க்கு எதி­ரான நமது போராட்­டத்­தி­லி­ருந்து நமது கவ­னத்­தைத் திருப்­பி­விட முடி­யாது. நாம் ஒன்­றி­ணைந்து அணி­வ­குக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

“பொது சுகா­தா­ரம், பாது­காப்பு என்று ஒவ்­வொன்­றின் மீதும் கவ­னம் செலுத்­தும் அதே­வேளை நமது பொரு­ளி­யலை கவ­ன­மாக மீண்­டும் திறக்க வேண்­டிய அவ­சி­ய­மும் உள்­ளது,” என்று டாக்­டர் விவி­யன் மேலும் குறிப்­பிட்­டார்.

தரவுகளை போலிஸ் பயன்படுத்தும் தருணம்: உதாரணத்துடன் விளக்கம்

சட்­ட­மாக உரு­வெ­டுக்­கும் திருத்த மசோதா, ஏழு வகை­யான கடும் குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு மட்­டுமே டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­களை போலிஸ் பயன்­ப­டுத்­தும் என தெளி­வுப­டுத்­து­கிறது.

துப்­பாக்கி மற்­றும் ஆபத்­தான ஆயு­தங்­க­ளின் பயன்­பாடு, பயங்­க­ர­வா­தம், கொலை, மரண தண்­ட­னைக்­கு­ரிய போதைப்­பொ­ருள் குற்­றங்­கள், கடத்­தல், பாலி­யல் பலாத்­கா­ரம் போன்­றவை பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்­கும் உயி­ருக்­கும் உட­னடி அச்­சு­றுத்­த­லாக விளங்­கக்­கூ­டி­யவை என்­ப­தால் கடு­மை­யான குற்­றங்­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­களை போலிஸ் பயன்­ப­டுத்த வேண்­டிய சூழல் குறித்து அவர் உதா­ர­ணத்­து­டன் விளக்­கி­னார்.

“ஒரு குழந்தை கடத்­தப்­ப­டு­கிறது. அப்­போது அந்­தக் குழந்­தை­யி­டமிருந்த கைபேசி அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் கருவி கிடைக்­கிறது. குழந்­தை­யின் தாய் அதனை எடுத்­துக்­கொண்டு போலி­சி­டம் செல்­கி­றார். இதை வைத்து எது­வும் செய்­ய­மு­டி­யாது என்று அப்­போது போலிஸ் கூறு­வது பொருத்­த­மாக இருக்­குமா,” என்று மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்து அவர் வின­வி­னார். தர­வு­

க­ளை சோதிக்க மாட்­டோம் என அப்­போது போலிஸ் கூறு­வது ஏற்­கத்­தக்­க­தாக இருக்­காது என்­றும் அவர் கூறி­னார்.

இதற்கிடையே, டிரேஸ்டு கெதர் கருவியிலுள்ள தங்க ளது தொடர்பு தடமறிதல் தரவுகளை அரசாங்கக் கணினிகளிலிருந்து நீக்கு மாறு கடந்த மாதம் 350 பேர் கோரிக்கை விடுத்ததாக திரு விவியன் கூறினார்.

குறிப்பிட்ட சில குற்ற விசாரணைகளுக்கு அந்தத் தரவுகளை போலிஸ் பயன் படுத்தலாம் என வெளியான தகவலைத் தொடர்ந்து அக்கறைகள் எழுந்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

அதே காலகட்டத்தில் டிரேஸ்டுகெதர் என்னும் தொடர்புகளின் தடமறிதல் தேசிய திட்டத்தின் ஒரு பகுதி யாக 390,000க்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து இருப்ப தாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 80 விழுக் காட்டினர் டிரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது அதற்கான கருவியைப் பெற்று உள்ளனர் என்றும் திரு விவியன் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!