அடுத்த சில வாரங்களில் சிங்கப்பூர் பயணிகள், ஆஸ்திரேலியாக்குச் செல்ல முடியும். அதற்கான சிறப்புப் பயண ஏற்பாடுகளை சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியா செய்து வருகிறது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், "நவம்பர் 23ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்ட அனைத்துப் பயணிகளும் ஆஸ் தி ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்," என்றார்.
ஆரம்பத்தில் மாணவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். டிசம்பரிலிருந்து சுற்றுப் பயணிகளுக்கும் அனுமதி தரப்படும். இந்தச் சிறப்புப் பயண ஏற்பாட்டில் பயணிகள் தனிமைப் படுத்தப்பட மாட்டார்கள்.
"சிங்கப்பூர் அரசாங்கத்துடனான சிறப்புப் பயண ஏற்பாட்டின் இறுதிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். சில வாரங்களில் அது இறுதி செய்யப்படும். அதன்பிறகு சிங்கப்பூரிலிருந்து விசா வைத்திருப்பவர் களுக்கு எல்லைகள் திறக்கப்படும்," என்று நேற்று பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர் பயணிகளை அனுமதிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வரவேற்றுள்ளார்.
சென்ற ஜூன் மாதம் பிரதமர் ஸ்காட் மோரிசன் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அத்தகைய ஏற்பாட்டைச் செய்ய அவரிடம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். "சிங்கப்பூரும் ஆஸ் திரேலியாவும் வலுவான பொருளியல், முதலீட்டு இணைப்புகளைக் கொண்டுள்ள நாடுகள். இரு நாட்டு மக்களிடையே இதயபூர்வமான உறவு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான தொடர்பு மீண்டும் தொடங்குவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சரான எஸ். ஈஸ்வரன், இரு நாடுகளுக்கு இடையிலானப் பயணங்களை படிப் படியாக அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து செயல்பட சிங்கப்பூர் தயாராக இருப்பதாக தெரி வித்துள்ளார்.
இதற்கிடையே ஆஸ்திரேலி யாவில் படிக்கும் சிங்கப்பூர் மாண வர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மருத்துவம் பயிலும் சாரா குவோக்குக்கு கொவிட்-19 கட்டுப் பாடுகளால் கடந்த ஆண்டு ஆஸ் திரேலியா திரும்ப முடியவில்லை.
காணொளி வழியாக நடத்தப் பட்ட பாடங்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்தி ரேலியா, எல்லைகளைத் திறப்பது அடிலெய்ட் பல்கலைக் கழகத்தின் 2வது ஆண்டு மாணவியான 21 வயது சாராவுக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டி அளித்த சாரா உட்பட பத்து மாணவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாக தெரி வித்தனர்.