சிங்கப்பூரில் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 92 வயது மூதாட்டி ஒருவர் கடந்த வியாழக்கிழமையன்று மாண்டார்.
இதுவே ஓமிக்ரான் காரணமாக சிங்கப்பூரில் பதிவாகி இருக்கும் முதல் மரணம்.
குடும்ப உறுப்பினரிடமிருந்து அந்த மூதாட்டிக்கு ஓமிக்ரான் கிருமி பரவியதாக தெரிவிக்கப்
பட்டது.
கிருமித்தொற்று ஏற்பட்டு பத்து நாள்கள் கழித்து அவர் மாண்டார்.
மூதாட்டி வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
மாண்ட மூதாட்டியின் குடும்பத்திடம் சுகாதார அமைச்சு தனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.
"சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்
களுடன் இணைந்து நோயாளி
களைப் பராமரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வோம்," என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் கிருமிப் பரவல் அதிகரித்து வருவதால் கொவிட்-19 அலை மோசமடையக்கூடும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. அன்றாட பாதிப்புகளில் 70 விழுக்காடு ஓமிக்ரான் கிருமியால் ஏற்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.