‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சிங்கப்பூரர்’ விருது சக்திபாலன் பாலதண்டாயுதம், 28, என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று திரு சக்திபாலனுக்கு வழங்கிக் கௌரவித்தார். தமது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கி ஒரு வயதுக் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த சக்திபாலனின் தன்னலமற்ற செயலுக்காகவும் மற்றவர்
களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததற்காகவும் அவர் இந்த விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
2020 ஜூலையில் தங்களுடைய ஒரு வயது குழந்தை ரேயாவுக்கு கல்லீரலைத் தானம் செய்ய யாராவது முன்வர முடியுமா என்று அதன் பெற்றோர் சமூக ஊடகம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருந்ததை சக்திபாலன் கவனித்தார். அன்றைய தினம் பின்னிரவு 1 மணியளவில் குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொண்ட அவர், தம்முடைய கல்லீரலின் ஒரு பகுதியை தாம் முன்பின் அறிந்திராத அந்தக் குழந்தைக்குத் தானமாக வழங்க அப்போதே முடிவுசெய்தார்.
பல்வேறு சுற்று மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, தம்முடைய கல்லீரலின் 23 விழுக்காட்டை குழந்தை ரேயாவுக்கு அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தானமாக வழங்கினார் இவர். யுபிஎஸ் பல்
கலைக்கழக வளாகத்தில் நடந்த விருது விழங்கும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அதிபர் ஹலிமா பங்கேற்றார்.
இறுதிச்சுற்றுக்குத் தேர்வான அனைவரும், பெரியதொரு நோக்கத்திற்காக சிங்கப்பூரர்கள் சேவையாற்றக்கூடியவர்கள் என்பதை உணர்த்தி இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார். மனிதாபிமானத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.